Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

சதுரங்கம்: உலகத் தரவரிசையில் முதலிடம் வகித்தவரை மீண்டும் வென்ற இந்திய இளைஞர்!

வாசிப்புநேரம் -

இந்தியாவைச் சேர்ந்த ரமேஷ்பாபு பிரக்னாநந்தா (Rameshbabu Praggnanandhaa) நேற்று (20 மே) நடைபெற்ற சதுரங்கப் போட்டியில் மீண்டும் மேக்னஸ் கார்ல்சனை (Magnus Carlsen) இரண்டாம் முறையாகத் தோற்கடித்திருக்கிறார். 

கடந்த பிப்ரவரி மாதம் நடந்த போட்டியில் பிரக்னாநந்தா முதல்முறையாக உலகத் தரவரிசையில் முதலாம் இடத்தில் இருந்த திரு கார்ல்சனைத் தோற்கடித்தார்.

பிரக்னாநந்தாவிற்கு இந்த வாரம் பள்ளித் தேர்வுகள் இருந்ததாகத் தெரிவித்தார். இருப்பினும் இந்தத் துறையின் பிரபல நட்சத்திரத்தோடு போட்டி போடும் வாய்ப்பை இழக்க விரும்பவில்லை என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

பதின்மவயது பிரக்னாநந்தா மீண்டும் இந்தியாவுக்குப்  பெருமை சேர்த்திருக்கிறார் என்று பலரும் பாராட்டி வருகின்றனர்.

-Reuters

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்