Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

போட்டிக்கு முன்பு தாக்கப்பட்ட தடையோட்ட வீரர்... கண் கட்டோடு வெற்றிபெற்றார்

வாசிப்புநேரம் -

பிரான்ஸில் ஆண்களுக்கான 400 மீட்டர் தடையோட்டத்தின் இறுதிச் சுற்றுக்கு முன்பு தாக்கப்பட்ட வில்ஃப்ரெட் ஹாப்பியோ (Wilfried Happio) கண் கட்டோடு வெற்றி பெற்றார்.

23 வயது ஹாப்பியோ பந்தயத்திற்குத் தயாராகிக் கொண்டிருக்கும்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அவரைத் தாக்கினார்.

அந்தச் சம்பவம் பந்தயம் தொடங்குவதற்கு 20 நிமிடங்களுக்கு முன்பு நடந்தது.

தாக்கிய ஆடவர் கைது செய்யப்பட்டார்.

ஹாப்பியோவின் ஒரு கண்ணில் கட்டுப் போட வேண்டிய கட்டாயம் நேர்ந்தது.

ஒரு கண்ணின் பார்வை மட்டுமே இருந்தாலும், அவர் பந்தயத்தை 48.57 வினாடிகளில் வென்று தனது சொந்தச் சாதனையை முறியடித்தார்.

தாக்குதல் சம்பவம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

-AFP

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்