ஆட்டத்தின்போது கம்போடிய விளையாட்டாளருக்கு உதவி மனத்தை வென்ற லாவோஸ் காற்பந்து வீரர்
தென்கிழக்காசிய விளையாட்டுகளின் காற்பந்தாட்டத்தின்போது மயங்கி விழுந்த கம்போடியக் காற்பந்து வீரருக்கு உதவிபுரிந்து பலரின் உள்ளத்தைக் கவர்ந்தார் லாவோஸ் காற்பந்து வீரர் அட் வியங்காம் (At Viengkham).
இணையத்தில் வியங்காமிற்குப் பாராட்டு மழை பொழிகிறது.
நேற்று முன்தினம் (மே 9) கம்போடியாவுக்கும் லாவோஸுக்கும் இடையே நடைபெற்ற காற்பந்தாட்டத்தின்போது கம்போடிய விளையாட்டாளர் பாட் சோகாவும் (Phat Sokha) வியங்காமும் மோதிக்கொண்டனர்.
மோதலில் மயங்கி விழுந்த பாட் தமது நாக்கை விழுங்காமல் இருக்க, அவரது வாயினுள் கையைவிட்டுத் தடுத்தார் வியங்காம்.
பாட்டிற்கு மருத்துவ உதவியும் அளிக்கப்பட்டது.
சுமார் ஒரு நிமிடத்திற்குப் பிறகு பாட் மயக்கம் தெளிந்தார்.
ஆட்டத்தை 4-1 என்ற கோல் கணக்கில் கம்போடியா வென்றது.
வியங்காமின் நற்குணத்தை இணையவாசிகள் பலரும் புகழ்ந்துள்ளனர்.
"கம்போடியா ஆட்டத்தை வென்றிருக்கலாம்... ஆனால் லாவோஸ் மனத்தை வென்றுவிட்டது..."
என்றார் ஒருவர்.