'சவுதி அரேபியாவில் விளையாடமாட்டேன்!' - டென்னிஸ் வீரர் ஏண்டி மர்ரே
எதிர்காலத்தில் சவுதி அரேபியாவில் நடைபெறும் எந்த டென்னிஸ் போட்டியிலும் விளையாடப்போவதில்லை என்று பிரபல டென்னிஸ் வீரர் ஏண்டி மர்ரே (Andy Murray) கூறியுள்ளார்.
அங்கு விளையாட ஏற்கனவே வந்த வாய்ப்பை நிராகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சவுதி அரேபியாவில் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் மர்ரே அந்த முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது.
சிறந்த டென்னிஸ் விளையாட்டாளர்கள் பலர் சவுதி அரேபியாவில் நடைபெறும் டென்னிஸ் ஆட்டங்களில் கலந்துகொள்ள மறுத்துள்ளதாக மர்ரே குறிப்பிட்டார்.
நாளை (27 ஜூன்) நடைபெறவுள்ள Grand Slam டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் மர்ரே ஆஸ்திரேலியாவின் ஜேம்ஸ் டக்வோர்த்தைச் (James Duckworth) சந்திக்கவுள்ளார்.
மர்ரே, Grand Slam போட்டியை இதுவரை 3 முறை வென்றிருக்கிறார்.
-Reuters