Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

கத்தாரில் உலகக் கிண்ணக் காற்பந்து - போட்டிக்கு 3 மணி நேரத்திற்கு முன்பு மதுபானம் விற்கப்படும்

வாசிப்புநேரம் -

கத்தாரில் நடைபெறவுள்ள உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டி தொடங்குவதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பும் இறுதி விசிலுக்கு ஒரு மணி நேரம் பின்பும் நுழைவுச்சீட்டு வாங்கிய பார்வையாளர்கள் மதுபானம் வாங்க அனுமதிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் ஆட்டம் நடைபெறும்போது மதுபானம் வாங்க அனுமதி வழங்கப்படாது என்று கூறப்பட்டது.

போட்டியின்போது மதுபானம் விற்க உலகக் கிண்ணப் போட்டியின் முக்கிய ஆதரவாளரான Budweiser நிறுவனம் உரிமம் பெற்றுள்ளது.

அரங்கங்களைச் சுற்றியுள்ள இடத்தில் மட்டுமே மதுபானம் விற்க அனுமதியுண்டு.

மற்ற உலகக் கிண்ணப் போட்டிகளில் அனைத்து நேரங்களிலும் மதுபானம் விற்கப்பட்டது.

ஆனால் போட்டி இம்முறை இஸ்லாமிய நாட்டில் நடைபெறுவதால் ஏற்பாட்டாளர்கள் பல புதுவகையான சிக்கல்களை எதிர்நோக்குவதாகக் கூறப்படுகிறது.

மதுபானம் எங்கே, எப்போது விற்கப்படும் என்பது முடிவு செய்யப்பட்டுவிட்டாலும் அதன் விலை இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை.

-Reuters

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்