Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

AFF Suzuki கிண்ணக் காற்பந்து: கிண்ணத்தை வெல்வதுதான் இலக்கு, அலட்சியமாக இருக்கமாட்டோம்- தாய்லந்து

AFF Suzuki கிண்ணக் காற்பந்து: கிண்ணத்தை வெல்வதுதான் இலக்கு, அலட்சியமாக இருக்கமாட்டோம்- தாய்லந்து

வாசிப்புநேரம் -

AFF Suzuki கிண்ணக் காற்பந்து கிண்ணத்தை வெல்வதுதான் இலக்கு என்றும் வீரர்கள் அலட்சியமாக இருக்கக்கூடாது என்றும் தாய்லந்துப் பயிற்றுவிப்பாளர் மனோ போல்கிங் (Mano Polking) தெரிவித்துள்ளார்.

நேற்று இறுதியாட்டத்தின் முதல் போட்டி நடந்தது.

அதில் தாய்லந்து 4 - 0 என்ற கோல் கணக்கில் இந்தோனேசியாவை வீழ்த்தியது.

இரண்டாவது ஆட்டம் புத்தாண்டு தினத்தன்று மாலை நடக்கவுள்ளது.

இறுதியாட்டத்தின் முதல் போட்டிதான் முடிந்துள்ளது, இன்னும் இரண்டாவது போட்டி மீதமுள்ளதால் வீரர்கள் அலட்சியமாக இருக்கக்கூடாது என்றார் போல்கிங்.

காற்பந்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் அதனால் கவனமாக இருக்கவேண்டும் என்றார் அவர்.

ஐந்து முறை AFF Suzuki கிண்ணக் காற்பந்துப் போட்டியை வென்றுள்ள தாய்லந்து, புத்தாண்டு தினத்தன்று ஆறாவது முறையாகக் கிண்ணத்தை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

AFF Suzuki கிண்ணம் 2020' போட்டிகளை meWATCH தளத்தில் நேரடியாகக் காணலாம். mewatch.sg/affsuzukicup2020 என்ற இணையத்தளத்தில் பதிந்துகொள்ளவும்.
AFF Suzuki கிண்ணம் 2020இன் அதிகாரபூர்வ ஒளிபரப்புக் கட்டமைப்பான மீடியாகார்ப்புடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

-Reuters/vc 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்