64 ஆண்டுகள் கழித்து உலகக்கிண்ணக் காற்பந்துப் போட்டிக்குத் தகுதிபெற்றுள்ள வேல்ஸ்
1958ஆம் ஆண்டுக்குப் பிறகு வேல்ஸ் மீண்டும் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளது.
நேற்று (ஜூன் 5) வேல்ஸ் தலைநகர் கார்டிஃபில் (Cardiff) நடந்த தகுதிச்சுற்றில் 1-0 என்ற கோல் கணக்கில் வேல்ஸ் உக்ரேனை வென்றது.
உக்ரேன் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியிலிருந்து வெளியேறியது.
1958இல் வேல்ஸ் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் காலிறுதிச் சுற்றில் வெளியானது.
அப்போது பிரேசிலின் 17 வயது பெல்லேயின் கோலால் வேல்ஸ் தோல்விகண்டது.
வரும் நவம்பர் மாதம் உலகக் கிண்ணப் போட்டியின் குழுச்சுற்றில் இங்கிலாந்து, அமெரிக்கா, ஈராக் ஆகிய நாடுகளை வேல்ஸ் சந்திக்கும்.
-AFP