இந்திய பேட்மின்ட்டன் பொதுவிருதுப் போட்டியிலிருந்து விலகினார் சிங்கப்பூர்ப் போட்டியாளர் இயோ ஜியா மின்
சிங்கப்பூரைச் சேர்ந்த பேட்மின்ட்டன் ஆட்டக்காரர் இயோ ஜியா மின் (Yeo Jia Min) இந்திய பேட்மின்ட்டன் பொதுவிருதுப் போட்டியிலிருந்து விலகியுள்ளார்.
கடுமையான காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகக் குமாரி இயோ சொன்னார். தமக்கு ஏற்பட்ட காய்ச்சல், இரவில் 38.6 டிகிரி செல்சியஸை எட்டியதாக அவர் தெரிவித்தார்.
போட்டியின் காலிறுதிச் சுற்றிலிருந்து விலகியுள்ளதாகத் தமது Instagram பக்கத்தில் அவர் குறிப்பிட்டார்.
போட்டியில் கலந்துகொள்ளவே தாம் விரும்பியதாகவும் ஆனால், மருத்துவர் அதைத் தவிர்க்கும்படி ஆலோசனை வழங்கியதாகவும் அவர் சொன்னார்.
குமாரி இயோ கிருமித்தொற்றுப் பரிசோதனை மேற்கொண்டாரா என்பது குறித்துத் தகவல் தெரிவிக்கவில்லை.