Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

தாய்லந்தில் Omicron ரகக் கிருமியால் முதல் நபர் மரணம்

வாசிப்புநேரம் -

தாய்லந்தில் முதல்முறையாக ஓமக்ரான் ரகக் கிருமித் தொற்றுக்கு ஆளான ஒருவர் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோங்க்லா (Songkhla) மாநிலத்தைச் சேர்ந்த 86 வயது மாது ஓமக்ரான் கிருமியால் உயிரிழந்தார்.

அவர் படுத்த படுக்கையாய் இருந்தவர் என்றும் அவருக்கு Alzheimer's disease எனப்படும் முதுமை மறதி நோய் இருந்ததாகவும் தாய்லந்து சுகாதார அமைச்சின் பேச்சாளர் கூறினார்.

ஓமக்ரான் ரகக் கிருமியால் மரணம் ஏற்படுவது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான் என்று அவர் சொன்னார்.

தாய்லந்தில் இதுவரை 10,000க்கும் அதிகமான ஓமக்ரான் தொற்றுச் சம்பவங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

அங்கு, முதல் ஓமக்ரான் தொற்றுச் சம்பவம் சென்ற மாதம் அடையாளம் காணப்பட்டது.

அதை அடுத்து தாய்லந்து செல்லும் வெளிநாட்டுப் பயணிகள் கட்டாயம் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாடு மீண்டும் நடப்புக்குவந்தது. 

-Reuters/yb

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்