தோக்கியோவில் தேர்வுகளின்போது கத்திக்குத்துத் தாக்குதல் - மாணவர்கள் காயம்
ஜப்பான் தலைநகர் தோக்கியோவில் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுகளின்போது கத்திக்குத்துத் தாக்குதல் நேர்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்கள் சிலர் காயமுற்றதாக ஜப்பான் ஊடகம் கூறியது.
காலையில் தேர்வுகளை எழுத மாணவர்கள் கூடியிருந்தபோது இன்னொரு மாணவர் அவர்களைக் கூர்மையான பொருளால் தாக்கியதாக NHK செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.
காயமுற்ற மூவர் சுயநினைவுடன் இருப்பதாகக் கூறப்பட்டது.
தாக்குதலை நடத்தியதாக நம்பப்படும் 17 வயது பள்ளி மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜப்பானில் சுமார் அரை மில்லியன் மாணவர்கள் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுகளை இவ்வார இறுதியில் எழுதவுள்ளனர்.
தாக்குதல் குறித்துத் தோக்கியோ காவல்துறை கருத்துத் தெரிவிக்கவில்லை.
-Reuters/mi