Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

நீண்டநாள் சேர்ந்து வாழ்ந்தோம்... இப்போது பிரிகிறோம் - நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

வாசிப்புநேரம் -

தமிழ்த் திரையுலகில் பலரும் நன்கறிந்த இணை - ஐஸ்வர்யா ரஜினிகாந்த், நடிகர் தனுஷ். 

தாங்கள் பிரிந்துவிட்டதாக இருவரும் தத்தம் சமூக ஊடகப் பக்கங்களில் அறிவிப்பு ஒன்றை நேற்று வெளியிட்டனர். 

18 ஆண்டுகள் சேர்ந்து இருந்திருக்கும் ஐஸ்வர்யா, தனுஷ் இணை கணவன்-மனைவி, பெற்றோர், நண்பர்கள் எனப் பல பரிமாணங்களில் தங்கள் உறவு இருந்துள்ளதை அறிவிப்பில் சுட்டினர். 

வளர்ச்சி, புரிந்துணர்வு, விட்டுக்கொடுப்பது என்பனவற்றின் அடிப்படையில் தங்கள் உறவு இருந்ததாகவும் அவர்கள் குறிப்பிட்டனர். 

ஒரே பாதை இப்போது இரண்டு பாதையாக மாறியுள்ளதாகவும் இருவரும் வெவ்வேறு வழியில் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அறிவிப்பில் பகிரப்பட்டது. 

செய்தியைக் கேட்டவுடன் இணையவாசிகளிடையே குழப்பம் எழுந்துள்ளது. 

நன்றாகத் தானே இருந்தனர்... என்னவாயிற்று

என்று கேள்வி எழுப்பியுள்ளனர் பலர். 

திடுக்கிட்டுப் போனதால்  பேச வார்த்தையின்றி மௌனமாகவே இருக்கின்றனர் ரசிகர்கள் பலர். 

உரிய நேரத்தையும் தனிப்பட்ட விதத்தில் திருமண முறிவை எதிர்நோக்கும் வாய்ப்பையும் அளிக்குமாறு தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் மக்களிடம் தங்கள் அறிவிப்பின்மூலம் கேட்டுக்கொண்டனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்