Skip to main content
வேலையின்போது தூங்கிய காவல்துறை நாய்க்கு ஊக்கத்தொகை இல்லை
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

வாழ்வியல்

வேலையின்போது தூங்கிய காவல்துறை நாய்க்கு ஊக்கத்தொகை இல்லை

வாசிப்புநேரம் -
வேலையின்போது தூங்கிய காவல்துறை நாய்க்கு ஊக்கத்தொகை இல்லை

(படம்: Pixabay)

சீனாவின் முதல் Corgi காவல்துறை நாய்க்கு ஆண்டிறுதி ஊக்கத்தொகை கிடைக்காது.

வேலையின்போது தூங்கியது..

சொந்த உணவுப் பாத்திரத்தில் சிறுநீர் கழித்தது..

இவற்றுக்காக ஃபுஸாய் (Fuzai) எனும் அந்த நாய்க்கு ஊக்கத்தொகை வழங்கப்படவில்லை.

சீனாவின் இணையவாசிகளுக்கு அது வேடிக்கையாகத் தெரிந்தது.

2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அது காவல்துறைப் பயிற்சியில் சேர்க்கப்பட்டது.

கடந்த ஆண்டு (2024) 4 மாதக் குட்டியாக இருந்தபோதே அது வெடிகுண்டுகளைக் கண்டுபிடிக்கும் பிரிவில் பணிபுரியத் தொடங்கியது.

அதே ஆண்டு மார்ச் மாதம் ஃபுஸாய் இணையத்தில் பிரபலமானது.

வெடிகுண்டுகளைக் கண்டுபிடிக்கும் அதன் திறன்களைக் கண்டு இணையவாசிகள் பாராட்டினர்.

அப்போது முதல் ஃபுஸாய் பற்றிய செய்திகள் சீனாவில் பிரபலமாகத் தொடங்கின.
ஆதாரம் : South China Morning Post

மேலும் செய்திகள் கட்டுரைகள்