'Gen Z தலைமுறையினருடன் வேலை செய்வது சிரமம்' - இணையத்தில் சர்ச்சையைக் கிளப்பிய பதிவு
வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
ஹர்னித் கோர் (Harnidh Kaur) என்பவர் Gen Z தலைமுறையினரைக் குறைகூறி 'X' தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.
அந்தப் பதிவு இணையவாசிகளிடையே பெருமளவில் சர்ச்சையைக் கிளப்பியது.
தமது நண்பர்கள் Gen Z தலைமுறையினரை வேலையில் அமர்த்தத் தயங்குவதாகவும் ஹர்னித் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
"Gen Z தலைமுறையினர் மரியாதையின்றி நடந்துகொள்கின்றனர்.அவர்களுடன் வேலை செய்வது சிரமமாக உள்ளது. மற்ற ஊழியர்களுடன் பழக அவர்களுக்குத் தெரிவதில்லை. அதனால் எனது தலைமுறையைச் சேர்ந்த நண்பர்கள் சிலர் அவர்களை வேலையில் சேர்ப்பதில்லை," என்றார் அவர்.
Gen Z தலைமுறையினர் அவர்களது உணர்ச்சிகளுக்கு மற்றவர்கள் மதிப்புக் கொடுத்து நடந்துகொள்ளவேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர் என்றும் அவர்கள் பிறரது உணர்ச்சிகளுக்கு மதிப்புத் தருவதில்லை என்றும் ஹர்னித் குறிப்பிட்டிருந்தார்.
அந்தப் பதிவைக் கண்ட இணையவாசிகள் மாறுபட்ட கருத்துகளைத் தெரிவித்திருந்தனர்.
"Gen Z தலைமுறையினர் ஊழியர்களுடன் பழகச் சிரமப்படுவது உண்மை என்றபோதிலும் முந்தைய தலைமுறையினர் அக்கறை காட்டாத பல விவகாரங்களில் அவர்கள் கவனம் செலுத்துகின்றனர்," என்று ஒருசிலர் கூறினர்.
"இந்தப் பதிவு குறுகிய கண்ணோட்டத்தைப் பிரதிபலிக்கிறது," என்று வேறு சிலர் தெரிவித்தனர்.
அந்தப் பதிவு இணையவாசிகளிடையே பெருமளவில் சர்ச்சையைக் கிளப்பியது.
தமது நண்பர்கள் Gen Z தலைமுறையினரை வேலையில் அமர்த்தத் தயங்குவதாகவும் ஹர்னித் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
"Gen Z தலைமுறையினர் மரியாதையின்றி நடந்துகொள்கின்றனர்.அவர்களுடன் வேலை செய்வது சிரமமாக உள்ளது. மற்ற ஊழியர்களுடன் பழக அவர்களுக்குத் தெரிவதில்லை. அதனால் எனது தலைமுறையைச் சேர்ந்த நண்பர்கள் சிலர் அவர்களை வேலையில் சேர்ப்பதில்லை," என்றார் அவர்.
Gen Z தலைமுறையினர் அவர்களது உணர்ச்சிகளுக்கு மற்றவர்கள் மதிப்புக் கொடுத்து நடந்துகொள்ளவேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர் என்றும் அவர்கள் பிறரது உணர்ச்சிகளுக்கு மதிப்புத் தருவதில்லை என்றும் ஹர்னித் குறிப்பிட்டிருந்தார்.
அந்தப் பதிவைக் கண்ட இணையவாசிகள் மாறுபட்ட கருத்துகளைத் தெரிவித்திருந்தனர்.
"Gen Z தலைமுறையினர் ஊழியர்களுடன் பழகச் சிரமப்படுவது உண்மை என்றபோதிலும் முந்தைய தலைமுறையினர் அக்கறை காட்டாத பல விவகாரங்களில் அவர்கள் கவனம் செலுத்துகின்றனர்," என்று ஒருசிலர் கூறினர்.
"இந்தப் பதிவு குறுகிய கண்ணோட்டத்தைப் பிரதிபலிக்கிறது," என்று வேறு சிலர் தெரிவித்தனர்.
ஆதாரம் : Others