Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

வாழ்வியல்

2 கருப்பைகள், 2 குழந்தைகள்.. மில்லியனில் ஒருவருக்கு நடக்கும் அரிய சம்பவம்

வாசிப்புநேரம் -
2 கருப்பைகள், 2 குழந்தைகள்.. மில்லியனில் ஒருவருக்கு நடக்கும் அரிய சம்பவம்

unsplash

சீனாவில் 2 கருப்பைகளோடு பிறந்த பெண் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்திருக்கிறார்.

அந்த அரியவகை நிலையுடன் பிறந்த அவருடைய கருப்பை ஒவ்வொன்றிலும் கரு உண்டாகியிருந்தது.

உலகத்திலேயே 0.3 விழுக்காட்டுப் பெண்களுக்கு மட்டுமே அப்படி ஒருநிலை ஏற்படும்.

அவற்றுள் 2 கருமுட்டைகள் இருப்பது அரிது.

வெற்றிகரமாகக் குழந்தைகளைப் பெற்றெடுப்பது அரிதினும் அரிது.

இம்மாதத் தொடக்கத்தில் அந்தப் பெண் ஓர் ஆண், ஒரு பெண் குழந்தையை ஈன்றெடுத்தார்.

இதற்கு முன் அவர் கர்ப்பமுற்றபோது அடையாளம் காணப்படாத காரணங்களால் அவருடைய கரு 27 வாரங்களில் கலைந்தது.
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்