Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

இதமான வாழ்க்கைச் சூழலுக்கு உதவும் தானியக்கக் குப்பை சேகரிக்கும் முறை

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் முதல்முறையாக யூஹுவாவிலுள்ள (Yuhua) 38 குடியிருப்புக் கட்டடங்களில் தானியக்க முறையில் குப்பைகளைச் சேகரிக்கும் முறை (Pneumatic Waste Conveyance System, PWCS) கொண்டுவரப்படுகிறது.

அதன் பயன்கள் யாவை? தகவல்களைத் திரட்டியது "செய்தி".

PWCS என்றால்?
  • வீட்டுக் கழிவுகளைச் சேகரிக்கிறது
  • நிலத்தடி உறிஞ்சும் குழாயைக் கொண்ட முறை
  • நிலத்தடிக் குழாய் வாயிலாகக் கழிவுகள் கொள்கலனுக்கு அனுப்பப்படுகின்றன
  • பின்னர் கழிவுகள் லாரிகள் வாயிலாக அகற்றப்படுகின்றன
இவை முழுவதும் தானியக்க முறையில் மேற்கொள்ளப்படுவதால் ஊழியர்களுக்கான தேவை குறைந்து உற்பத்தி அதிகரிக்கிறது.

திறந்தவெளி குப்பை சேகரிக்கும் முறையால் ஏற்படக்கூடிய சுற்றுச்சூழல், சுகாதாரப் பிரச்சினைகள் குறைகின்றன.

இதர நன்மைகள்?

<<இதமான வாழ்க்கைச் சூழல் உருவாகிறது>>
  • குப்பைத் தொட்டியிலிருந்து வெளியேறும் துர்நாற்றத்தை நீக்குகிறது
  •  குப்பைகளைச் சேகரிக்கும்போது அவை கீழே சிந்தாமல் பாதுகாக்கிறது
  • சுத்தமான, சுகாதாரமான சூழலை ஏற்படுத்துகிறது
  • குடியிருப்புப் பேட்டைகளைப் பொலிவூட்டுகிறது
<<சுற்றுச்சூழலுக்கு உகந்தது>>
  •  குப்பைத் தொட்டிகளைக் கழுவுவதற்கான தேவை குறைகிறது
  • ஈ, எறும்பு போன்ற பூச்சிகள் மொய்ப்பது குறைகிறது
<<மறுபயனீடு>>
  • கழிவுகளைப் பிரித்து மறுபயனீட்டுக்கு உதவுகிறது
PWCS குப்பைத் தொட்டிக்குள் எவற்றை வீசக்கூடாது?

-- அட்டைப் பெட்டிகள், தலையணை போன்ற பெரிய பொருள்கள்

-- குடைகள், துடைப்பம் போன்ற நீளமான பொருள்கள்

-- மரத்தண்டு, கட்டைகள், கற்கள் போன்ற கட்டுமானக்
கழிவுகள்

--பூச்சாடிகள், மின்னியல் சாதனம் போன்ற கனத்த பொருள்கள்

-- வண்ணப்பூச்சு, சிகரெட் துண்டுகள் போன்ற எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்கள்

இத்தகைய பொருள்களை அப்புறப்படுத்த நகர மன்றங்களின் உதவியை நாடலாம்.
ஆதாரம் : AGENCIES

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்