'பத்துத் தலை இராவணன்' - இந்தியாவில் தசரா பண்டிகைக்குத் தயாராகும் உருவ பொம்மைகள் (படங்கள்)
இந்தியாவில் எதிர்வரும் தசரா பண்டிகைக்காக உருவ பொம்மைகள் தயாராகிவருகின்றன.
நவராத்திரி எனும் 9 நாள் இந்துப் பண்டிகைக் கொண்டாட்டத்தை அடுத்துவரும் நாள் தசரா.
அந்த நாளன்று இந்தியாவின் பல பகுதிகளில் இராவணனின் மாபெரும் உருவ பொம்மைகள் எரிக்கப்படும்.
அது இந்துக் கடவுளான ராமர் இராவணனை வென்ற நாளாகக் கருதப்படுகிறது.
உருவ பொம்மைகளை அட்டைகளையும் எரியும் பொருள்களையும் கொண்டு தயாரிப்பதில்
புதுடில்லியின் பணியாளர்கள் மும்முரமாய் இறங்கியுள்ளனர்.
மேலும் அவர்கள் நவராத்திரியின் போது வழிபடப்படும் இந்துப் பெண் தெய்வங்களின் வண்ணமயமான உருவ பொம்மைகளையும் தயாரித்துவருகின்றனர்.
தசரா அடுத்த மாதம் 5ஆம் தேதி கொண்டாடப்படும்.