ஆக அதிகமானோர் படைத்த கோலாட்டம், தாளவாத்திய இசை - சிங்கப்பூரில் புதிய சாதனைகள்
ஆக அதிகமானோர் படைத்த கோலாட்டம், தாளவாத்திய இசை - சிங்கப்பூரில் புதிய சாதனைகள்
13 Jul 2024 09:33pm
சிங்கப்பூரில் ஒரே இடத்தில் 1,000க்கும் அதிகமான தாளவாத்தியக் கலைஞர்கள் சங்கமித்துப் புதிய சாதனையைப் படைத்துள்ளனர்.
உருமி மேளம், சண்ட மேளம், டோலக் எனப் பல்வேறு இந்தியத் தாளவாத்தியங்களை ஒரே இடத்தில் திரட்டி ஆனந்தா மரபுக்கலைகள் கூடம் சாதனை படைத்தது.
இவ்வாண்டின் இந்திய மரபுடைமை விழா நிகழ்ச்சியில் 2 புதிய சாதனைகள் படைக்கப்பட்டன.
ஒன்று ஆக ஆதிகமானோர் ஒன்றுசேர்ந்து படைத்த கோலாட்டம்.
மற்றொன்று ஆக அதிகமான இந்தியத் தாளவாத்தியங்கள் எழுப்பிய இசை.