ஆளுங்கட்சிக்கு ஆதரவு மிகுந்துள்ள சூழலில் அரும்பாடுபட்ட பாட்டாளிக் கட்சி உறுப்பினர்களுக்குப் பாராட்டு : பிரித்தம் சிங்
ஆளுங்கட்சிக்கு ஆதரவு மிகுந்துள்ள சூழலில் அரும்பாடுபட்ட பாட்டாளிக் கட்சி உறுப்பினர்களுக்குப் பாராட்டு : பிரித்தம் சிங்
பாட்டாளிக் கட்சி தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங் மக்கள் செயல் கட்சிக்கும் பிரதமர் லாரன்ஸ் வோங்குக்கும் தமது வாழ்த்துகளைக் கூறியுள்ளார்.
மக்களின் வலுவான ஆதரவைப் பெற்றதற்கு அவர் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
இன்று காலை யூனோஸ் சந்தையில் திரு சிங் செய்தியாளர்களிடம் பேசினார்.
தேசிய அளவில் ஆளும்கட்சிக்கு ஆதரவு கூடியிருக்கும் சூழலில் கடுமையாகப் பாடுபட்ட தமது கட்சி உறுப்பினர்களை அவர் மெச்சினார்.
சிங்கப்பூர் செய்தியில் மட்டும்
சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவையின் 50ஆம் ஆண்டு நிறைவு விழா
தமிழ் வாழும் மொழியாக தொடர்வதற்கு இளையர்களின் பங்கு முக்கியம் என்று உள்துறை, சட்ட அமைச்சர் கா சண்முகம் மீண்டும் வலியுறுத்தியிருக்கிறார். சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவை அதன் 50ஆம் ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடியது. அதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு திரு சண்முகம் உரையாற்றினார். இலக்கியம், நாடகம், கல்வி, விளையாட்டு, சமூகச் சேவை எனப் பல்வேறு திட்டங்களால் பல தமிழ் மாணவர்களைப் பேரவை தொடர்ந்து ஒன்றிணைத்து வருகிறது.