வேகவரம்பை மீறுவதற்காக விதிக்கப்படும் கடும் தண்டனையை வாகனமோட்டிகள் எப்படிப் பார்க்கிறார்கள்?
வேகவரம்பை மீறுவதற்காக விதிக்கப்படும் கடும் தண்டனையை வாகனமோட்டிகள் எப்படிப் பார்க்கிறார்கள்?
வேகவரம்பை மீறி வாகனங்களைச் செலுத்துவோருக்கு அபராதமும் குற்றப்புள்ளிகளும் உயர்த்தப்படுவது இன்னும் கவனமாக இருக்க உதவும் என்று ஓட்டுநர்கள் கூறுகின்றனர்.
அது வாகனமோட்டிகளின் பாதுகாப்பை உறுதிசெய்வதால் கடுமையான தண்டனை விதிக்கப்படுவதை அவர்கள் வரவேற்கின்றனர்.
தற்போது வேகவரம்பை மீறுவோருக்கு விதிக்கப்படும் அபராதம் 150 வெள்ளியிலிருந்து தொடங்குகிறது.
4 குற்றப்புள்ளிகளிலிருந்து கொடுக்கப்படுகின்றன.
அடுத்த ஆண்டு ஜனவரி முதல் வேகவரம்பை மீறுவோருக்குக் 50 முதல் 150 வெள்ளி வரை கூடுதல் அபராதமும் இன்னும் அதிகமாக ஆறு குற்றப்புள்ளிகளும் கொடுக்கப்படும்.