மக்கள் செயல் கட்சி அணியின் வெற்றி ஊர்வலம்
மக்கள் செயல் கட்சி அணியின் வெற்றி ஊர்வலம்
ஜூரோங் ஈஸ்ட்- புக்கிட் பாத்தோக் குழுத்தொகுதியில், நீடித்த நிலைத்தன்மை சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ தலைமையிலான அணி 76 விழுக்காட்டுக்கு மேல் வாக்குகளைப் பெற்று வெற்றிகண்டது.
எதிர்த்துப் போட்டியிட்டது ஒன்றுபட்ட சிவப்புப் புள்ளிக் கட்சி.
மக்கள் செயல் கட்சி அணி வெற்றி ஊர்வலம் நடத்தியது.
சிங்கப்பூர் செய்தியில் மட்டும்
சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவையின் 50ஆம் ஆண்டு நிறைவு விழா
தமிழ் வாழும் மொழியாக தொடர்வதற்கு இளையர்களின் பங்கு முக்கியம் என்று உள்துறை, சட்ட அமைச்சர் கா சண்முகம் மீண்டும் வலியுறுத்தியிருக்கிறார். சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவை அதன் 50ஆம் ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடியது. அதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு திரு சண்முகம் உரையாற்றினார். இலக்கியம், நாடகம், கல்வி, விளையாட்டு, சமூகச் சேவை எனப் பல்வேறு திட்டங்களால் பல தமிழ் மாணவர்களைப் பேரவை தொடர்ந்து ஒன்றிணைத்து வருகிறது.