மார்சிலிங் ஸ்ரீ சிவ கிருஷ்ண ஆலயக் குடமுழுக்கு - பக்தர்களின் நலனைத் தொடர்ந்து கவனித்துக்கொண்ட தொண்டூழியர்கள்
மார்சிலிங் ஸ்ரீ சிவ கிருஷ்ண ஆலயக் குடமுழுக்கு - பக்தர்களின் நலனைத் தொடர்ந்து கவனித்துக்கொண்ட தொண்டூழியர்கள்
மார்சிலிங் ரைஸில் உள்ள ஸ்ரீ சிவ கிருஷ்ண ஆலயத்தின் குடமுழுக்கு விழா இன்று காலை சிறப்பாக நடந்தேறியது.
ஞாயிற்றுக்கிழமை என்பதால் 10,000க்கும் அதிகமான பக்தர்கள் குடமுழுக்கைக் காணத் திரண்டிருந்தனர்.
காலை எட்டு மணிக்குக் கடப் புறப்பாடு தொடங்கியது.
சரியாக ஒன்பது மணிக்கு மங்கள வாத்தியங்கள் முழங்க, கோபுரக் கலசங்களுக்கும் விமானக் கலசத்துக்கும் குடமுழுக்கு நடைபெற்றது.
சிங்கப்பூர் செய்தியில் மட்டும்
சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவையின் 50ஆம் ஆண்டு நிறைவு விழா
தமிழ் வாழும் மொழியாக தொடர்வதற்கு இளையர்களின் பங்கு முக்கியம் என்று உள்துறை, சட்ட அமைச்சர் கா சண்முகம் மீண்டும் வலியுறுத்தியிருக்கிறார். சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவை அதன் 50ஆம் ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடியது. அதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு திரு சண்முகம் உரையாற்றினார். இலக்கியம், நாடகம், கல்வி, விளையாட்டு, சமூகச் சேவை எனப் பல்வேறு திட்டங்களால் பல தமிழ் மாணவர்களைப் பேரவை தொடர்ந்து ஒன்றிணைத்து வருகிறது.