GE2025: அணி மாறிய அமைச்சர்கள், எதிர்பாராதத் திருப்பம்
GE2025: அணி மாறிய அமைச்சர்கள், எதிர்பாராதத் திருப்பம்
ஜூரோங் பயனியர் தொடக்கக் கல்லூரி வேட்புமனுத் தாக்கல் நிலையத்தில் திடீர்த் திருப்பம்.
மனிதவள அமைச்சர் டான் சீ லெங்கும் துணைப்பிரதமர் கான் கிம் யோங்கும் தத்தம் குழுத்தொகுதிகளிலிருந்து மாறியுள்ளனர்.
இது வேட்புமனுத் தாக்கல் நிலையத்தில் கூடி இருந்தவர்களிடையே சற்றுப் பரபரப்பை ஏற்படுத்தியது.
சிங்கப்பூர் செய்தியில் மட்டும்
சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவையின் 50ஆம் ஆண்டு நிறைவு விழா
தமிழ் வாழும் மொழியாக தொடர்வதற்கு இளையர்களின் பங்கு முக்கியம் என்று உள்துறை, சட்ட அமைச்சர் கா சண்முகம் மீண்டும் வலியுறுத்தியிருக்கிறார். சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவை அதன் 50ஆம் ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடியது. அதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு திரு சண்முகம் உரையாற்றினார். இலக்கியம், நாடகம், கல்வி, விளையாட்டு, சமூகச் சேவை எனப் பல்வேறு திட்டங்களால் பல தமிழ் மாணவர்களைப் பேரவை தொடர்ந்து ஒன்றிணைத்து வருகிறது.