தீபாவளியின்போது சந்தை அமைத்து, நிதி திரட்டி, நேப்பாளத்தில் உள்ள ஆதரவற்ற பிள்ளைகளுக்குக் கொடுக்கவிருக்கும் அமைப்பு
தீபாவளியின்போது சந்தை அமைத்து, நிதி திரட்டி, நேப்பாளத்தில் உள்ள ஆதரவற்ற பிள்ளைகளுக்குக் கொடுக்கவிருக்கும் அமைப்பு
தீபாவளிப் பண்டிகைக்குத் தேவையான பொருள்களை ஒரே கூரையின்கீழ் வாங்கும் ஏற்பாட்டைச் செய்வதுடன் அதை ஒரு நிதித்திரட்டு முயற்சியாகவும் மாற்றியுள்ளது ஓர் அமைப்பு.
இந்தியா, நேப்பாளம், கம்போடியா, மலேசியா ஆகிய நாடுகளின் ஆதரவற்ற பிள்ளைகளின் கல்விக்கு உதவ 4 ஆண்டுக்குமுன் ஆரம்பிக்கப்பட்ட KriyaiD அமைப்பு நடத்தும் இரண்டாவது தீபாவளிச் சந்தை.
பலதரப்பட்ட பொருள்கள் விற்பனைக்கு வரும் சந்தை, Tekka Placeஇல் இன்று காலை 10.30 மணியிலிருந்து மாலை 6.30 மணி வரை இடம்பெறும்.
சந்தையிலிருந்து திரட்டப்படும் நிதி நேப்பாளத்தில் உள்ள ஆதரவற்ற பிள்ளைகளுக்குச் செல்லும்.