"திருமணத்தையும் பிள்ளை பெறுவதையும் சிங்கப்பூர் ஆதரிக்க வேண்டும்"
"திருமணத்தையும் பிள்ளை பெறுவதையும் சிங்கப்பூர் ஆதரிக்க வேண்டும்"
25 Aug 2026 11:49am
இந்த ஆண்டின் தேசிய தினக் கூட்ட உரையில் அறிவிக்கப்பட்ட பெற்றோர் ஆதரவுத் திட்டங்கள் நாட்டின் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க உதவும் என்று நம்புவதாக மனிதவளத் துணையமைச்சர் தினேஷ் வாசு தாஸ் கூறியிருக்கிறார்.
அவை பெற்றோர் மட்டுமின்றி, வரும் காலத்தில் சிங்கப்பூரர்கள் திருமணம் செய்துகொண்டு பிள்ளை பெற்றுக்கொள்ள ஊக்குவிக்கும் நோக்கத்தில் வரையப்பட்டவை என்றார் அவர்.
நேற்று அறிவிக்கப்பட்ட சில திட்டங்கள் பற்றித் திரு தினேஷ் 'செய்தி'யுடன் பேசினார்.