தமிழை வகுப்பறைக்கு வெளியே கொண்டுவந்த 'அரிமா' போட்டி
தமிழை வகுப்பறைக்கு வெளியே கொண்டுவந்த 'அரிமா' போட்டி
அரிமா - பள்ளிகளுக்கிடையேயான தமிழ் மொழிப் போட்டி.
உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் பல்வேறு நடவடிக்கைகள் மூலம் தங்கள் தமிழ் மொழி அறிவையும் திறனையும் வெளிப்படுத்தினர்.
இரண்டாவது ஆண்டாக நடத்தப்படும் போட்டிக்கு நல்ல வரவேற்பு.
சிங்கப்பூர் தமிழ் இளைஞர் மன்றம் போட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தது.
பல்வேறு பள்ளிகளில் உயர்நிலை 3 முதல் 5 வரை பயிலும் மாணவர்கள் பங்கேற்றனர்.
நான்கு சுற்றுகளாக நடத்தப்பட்டது போட்டி.
தமிழ் மொழி, பண்பாடு, பாரம்பரியம் தொடர்பான கேள்விகள் உட்படப் பல்வேறு சவால்கள்.
மாணவர்களிடம் தமிழ் மீதான ஆர்வத்தைத் தூண்ட உதவியது போட்டி.