கொலையாளியை நீதிமன்றத்தில் எதிர்கொண்ட பலியானவர் - AI வடிவில்
வாசிப்புநேரம் -

(படம்: Envato Elements)
அமெரிக்காவின் அரிஸோனா மாநிலத்தில் சாலை அச்சுறுத்தல் சம்பவத்தில் கொலையுண்ட ஒருவர் செயற்கை நுண்ணறிவைக் கொண்டு நீதிமன்றத்தில் பேசினார்.
3 ஆண்டுகளுக்கு முன் கிரிஸ் பெல்கி (Chris Pelkey) சுட்டுக்கொல்லப்பட்டார். குற்றவாளியை எதிர்கொள்ள அவருடைய தோற்றம் செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்டது. அந்தத் தோற்றம் குற்றவாளியுடன் நேரடியாகப் பேசியது.
"நான் உன்னை மன்னிக்கிறேன். இவ்வாறு நடக்கவில்லை என்றால் நாம் இருவரும் நண்பர்களாகக் கூட இருந்திருக்கலாம்," என்று அந்தச் செயற்கை நுண்ணறிவுத் தோற்றம் கூறியது.
செயற்கை நுண்ணறிவின் பயன்பாட்டை நீதிபதி பாராட்டினார். ஆனால் சில நிபுணர்கள் வழக்குகளில் செயற்கை நுண்ணறிவின் தாக்கத்தைப் பற்றி அக்கறை தெரிவித்துள்ளனர்.
செயற்கை நுண்ணறிவைக் கொண்டு பாதிக்கப்பட்டவர்களின் உண்மையான எண்ணங்களையும் கோரிக்கைகளையும் எந்த அளவுக்குப் பிரதிநிதிக்க முடியும் என்று நிபுணர்கள் வினவியுள்ளனர்.
ஆனால் திரு பெல்கியின் சகோதரி அதனை நிராகரித்தார். "செயற்கை நுண்ணறிவைக் கொண்டு காலமான என் சகோதரனுக்கு மீண்டும் குரல் கொடுக்க முடிந்தது. நாங்கள் இந்தத் தொழில்நுட்பத்தை முறையாகப் பயன்படுத்தியிருக்கிறோம்," என்று அவர் கூறினார்.
3 ஆண்டுகளுக்கு முன் கிரிஸ் பெல்கி (Chris Pelkey) சுட்டுக்கொல்லப்பட்டார். குற்றவாளியை எதிர்கொள்ள அவருடைய தோற்றம் செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்டது. அந்தத் தோற்றம் குற்றவாளியுடன் நேரடியாகப் பேசியது.
"நான் உன்னை மன்னிக்கிறேன். இவ்வாறு நடக்கவில்லை என்றால் நாம் இருவரும் நண்பர்களாகக் கூட இருந்திருக்கலாம்," என்று அந்தச் செயற்கை நுண்ணறிவுத் தோற்றம் கூறியது.
செயற்கை நுண்ணறிவின் பயன்பாட்டை நீதிபதி பாராட்டினார். ஆனால் சில நிபுணர்கள் வழக்குகளில் செயற்கை நுண்ணறிவின் தாக்கத்தைப் பற்றி அக்கறை தெரிவித்துள்ளனர்.
செயற்கை நுண்ணறிவைக் கொண்டு பாதிக்கப்பட்டவர்களின் உண்மையான எண்ணங்களையும் கோரிக்கைகளையும் எந்த அளவுக்குப் பிரதிநிதிக்க முடியும் என்று நிபுணர்கள் வினவியுள்ளனர்.
ஆனால் திரு பெல்கியின் சகோதரி அதனை நிராகரித்தார். "செயற்கை நுண்ணறிவைக் கொண்டு காலமான என் சகோதரனுக்கு மீண்டும் குரல் கொடுக்க முடிந்தது. நாங்கள் இந்தத் தொழில்நுட்பத்தை முறையாகப் பயன்படுத்தியிருக்கிறோம்," என்று அவர் கூறினார்.
ஆதாரம் : Others