ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து மோசமடையும் வெள்ளம்
ஆஸ்திரேலியாவின் சிட்னி (Sydney) நகரில் வெள்ளம் அதிகரித்துவருவதால் சுமார் 500,000 பேர் வெளியேறத் தயாராயிருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் கிழக்குக் கடற்கரை வட்டாரத்தில் ஒருவாரமாக இடைவிடாத அடைமழை.
குவீன்ஸ்லந்திலும் (Queensland) நியூ செளத் வேல்ஸிலும் (New South Wales) 13 பேர் மாண்டனர்.
வெள்ள நிலவரம் மோசமடைவதற்குள், வெளியேற்ற உத்தரவை மதித்து நடக்குமாறு நியூ சௌத் வேல்ஸ் மாநில முதலமைச்சர், மக்களிடம் கேட்டுக்கொண்டார்.
சில ஆறுகள் கரை மீறிப் பாயக்கூடும்.
சிட்னியின் சில பகுதிகளிலும் அருகிலுள்ள சில வட்டாரங்களிலும் ஒருமாதம் பெய்ய வேண்டிய மழை இன்று ஒரே நாளில் கொட்டித் தீர்க்கும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.