ஜொகூர் எல்லைச் சாவடிகளில் தொழில்நுட்பக் கோளாறு - பல்லாயிரம் வெளிநாட்டினர் திண்டாட்டம்
This audio is generated by an AI tool.
ஜொகூர் பாருவில் இரண்டு எல்லைச் சாவடிகளில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாகப் பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டுப் பயணிகள் பாதிக்கப்பட்டனர்.
சுல்தான் இஸ்கண்டார் சுங்கத்துறைக் கட்டடம் ஆக மோசமாகப் பாதிக்கப்பட்டதாக மலேசியாவின் ஸ்டார் நாளேடு கூறியது.
குறைந்தது 39 தானியக்க முகப்புகளில் கோளாறு ஏற்பட்டதாகத் தெரிகிறது.
வார இறுதிகளில் அதிகமான வெளிநாட்டுப் பயணிகள் வந்ததால் தானியக்க முறை முற்றிலும் முடங்கிப்போனதாகக் கூறப்படுகிறது.
பேருந்துப் பகுதிகளை நோக்கிச் செல்லும் குறைந்தது 29 தானியக்கச் சேவை முகப்புகள் முடங்கியதாக ஸ்டார் நாளேடு கூறியது.
தானியக்க முகப்புகள் முடங்கியதால் பயணிகளுக்குக் கைகொடுக்க அதிகாரிகளைக் கொண்டு சாதாரண முகப்புகள் திறக்கப்பட்டன.