Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

நீதி அமைச்சரைக் கடத்த முயற்சி - பெல்ஜியத்தில் சந்தேகத்தில் நால்வர் கைது

வாசிப்புநேரம் -

பெல்ஜியத்தின் நீதி அமைச்சரைக் கடத்த முயற்சி செய்த சந்தேகத்தில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

வின்செண்ட் வான் குவிக்கென்போர்ன் (Vincent Van Quickenborne) போதைப்பொருள் குண்டர் கும்பல் ஒன்று தம்மைக் கடத்த  முயன்றதாகக் கூறியிருக்கிறார். 

அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் அது குறித்துத் தம்மை எச்சரித்ததாக அவர் சொன்னார்.

நேற்று முன் தினம், அவருக்கு மோசமான அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாகக் கூறி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. 

அதன் தொடர்பில் நெதர்லந்தில் மூவர் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். 

அவர்களை பெல்ஜியத்துக்கு அனுப்புமாறு அதிகாரிகள் கோரியுள்ளனர். 

நெதர்லந்தைச் சேர்ந்த அந்த மூவருக்கும் வயது 20, 29, 48.

பின்னர் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார். 

நேற்று முன் தினம், தாம் பாதுகாப்பாக இருப்பதாய் டுவிட்டர் மூலம் தெரிவித்த பெல்ஜிய நீதி அமைச்சர், வன்முறைக்கு எதிரான தமது போராட்டம் தொடர்வதாய்ச் சொன்னார்.

ஆதாரம் : AFP

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்