அதிபர் ஜோ பைடன் அமெரிக்காவில் துப்பாக்கிகளைத் தடை செய்யும் சட்டங்களைக் கொண்டுவரவிருக்கிறார்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் துப்பாக்கிகளைத் தடை செய்யும் சட்டங்களைக் கொண்டுவரவிருப்பதாக உறுதி அளித்துள்ளார்.
கடந்த ஒரு வாரத்தில் நாட்டில் 3 துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் நடந்ததைத் தொடர்ந்து அவர் அவ்வாறு கூறினார்.
ஆபத்தை விளைவிக்கக்கூடியவர்கள் என நம்பப்படுவோர் துப்பாக்கிகளை வாங்குவதைத் தடை செய்யும் சட்டங்கள் தற்போது நடப்பில் உள்ளன.
அண்மை துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களைத் தொடர்ந்து அந்தச் சட்டங்கள் சீரற்ற விதத்தில் செயல்படுத்தப்படுவதாகச் சந்தேகங்கள் எழுந்துள்ளன.