பிரேஸிலில் வெள்ளம் - சுமார் 152 பேர் மரணம்
பிரேஸிலின் பெட்ரோபலிஸ் (Petropolis) நகரில் சூறாவளியால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்திலும் நிலச்சரிவுகளிலும் குறைந்தது 152 பேர் மாண்டனர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு போப் பிரான்சிஸ் (Pope Francis) தமது இரங்கலைத் தெரிவித்துக்கொண்டார்.
சேற்றிலும் இடிபாடுகளிலும் காணாமல் போனவர்களைத் தேடி மீட்கும் பணி தீவிரமாக நடைபெறுகிறது.
கடந்த செவ்வாய்க்கிழமை அந்தப் பகுதியைக் கடந்து சென்ற சூறாவளியில் சுமார் 160 பேரைக் காணவில்லை.
அவர்கள் உயிருடன் மீட்கப்படக்கூடிய சாத்தியம் குறைந்துவருவதாக அதிகாரிகள் கூறினர்.