Skip to main content
கனடா
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

கனடா - இந்தியா உறவு மீண்டும் மலருமா?

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

கனடா G7 மாநாட்டில் கலந்துகொள்ள இந்தியாவுக்கு அழைப்பு விடுத்துள்ளதை அந்நாட்டுப் பிரதமர் தற்காத்துப் பேசியுள்ளார்.

சட்ட அமலாக்கக் கலந்துரையாடலைத் தொடர்வதற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) ஒப்புக்கொண்டதாகக் கனடியப் பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) தெரிவித்தார்.

பல விநியோகச் செயல்பாடுகளில் இந்தியாவுக்கு முக்கியப் பங்குள்ளதாய்த் திரு கார்னி சுட்டினார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான அரசதந்திர உறவு மீண்டும் சீர்செய்யப்படலாம் என்று எதிர்பார்ப்பு நிலவுவதாய்க் கவனிப்பாளர்கள் கூறினர்.

மாநாட்டிற்கு இந்தியாவையும் அழைக்கும்படி பிற உறுப்புநாடுகள் கனடாவிற்கு நெருக்கடி கொடடுத்திருக்கலாம் என்று அவர்கள் கூறினர்.

ஈராண்டுக்கு முன்னர் கனடாவில் சீக்கியப் பிரிவினைவாதி கொல்லப்பட்ட சம்பவத்தில் இருநாடுகளுக்கும் இடையிலான உறவில் நெருடல் ஏற்பட்டது.

முந்திய கனடியப் பிரதமரின் தலைமையில் உறவு கசந்தது.
ஆதாரம் : AGENCIES

மேலும் செய்திகள் கட்டுரைகள்