Skip to main content
கனடாவில் தைப்பூசக் கொண்டாட்டம்!
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

கனடாவில் தைப்பூசக் கொண்டாட்டம்!

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

தைப்பூசத் திருவிழா பொதுவாகச் சிங்கப்பூர், மலேசியா, இந்தியா ஆகிய நாடுகளில் அனுசரிக்கப்படுகிறது.

ஆனால் ஆசிய நாடுகளைத் தாண்டி வேறொரு நாட்டிலும் தைப்பூசக் கொண்டாட்டத்தில் மக்கள் திளைத்தனர்.

Related article image
(படம்: ஐஸ்வர்யா)

கனடாவில் வாழும் தமிழ்ச் சமூகத்தினர் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு சிறப்பு வழிபாட்டு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தனர்.

தமிழர்கள் அதிக அளவில் வசிக்கும் பகுதியில் ஒன்றான ஸ்கார்பரோவில் அமைந்துள்ள கனடா கந்தசாமி கோயிலில் அந்த நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

Related article image
(படம்: ஐஸ்வர்யா)
கடும் குளிர், பனி ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் பலர் அவற்றில் உற்சாகமாகக் கலந்துகொண்டனர்.
Related article image
(படம்: ஐஸ்வர்யா)
அபிஷேகம், பால்குடம் செலுத்துதல் போன்ற பல்வேறு வழிபாடுகள் நடைபெற்றதாகக் கோயில் தொண்டூழியர் மாசிலா தெரிவித்தார்.
Related article image
(படம்: ஐஸ்வர்யா)

கடவுள் வழிபாடுகளைத் தவிர்த்து, குழந்தைகளுக்குத் தாய்மொழியான தமிழ் மொழியை அறிமுகம் செய்யும் தினமாகவும் தைப்பூசத் திருவிழா காணப்படுகிறது.

அதற்கான நிகழ்ச்சிகளும் கோயிலில் நடைபெற்றன.

அது "ஏடு தொடக்கல்" என்று அழைக்கப்படுகிறது.

Related article image
(படம்: ஐஸ்வர்யா)
தமது 2 வயது மகனான தமிழ் இனியனுக்குத் தமிழ்க் கடவுளான முருகன் முன்னிலையில் தமிழ் மொழியை அறிமுகம் செய்து வைத்ததில் பெருமை கொண்டார் சபிதா கோகுலன்.
Related article image
(படம்: ஐஸ்வர்யா)
Related article image
(படம்: ஐஸ்வர்யா)

கனடாவில் தைப்பூசத் திருவிழா கொண்டாடப்படும் விதம் வேறாக இருக்கலாம்.

புலம்பெயர்ந்த மண்ணிலும் தங்கள் வேர்களைத் தொலைத்துவிடக்கூடாது என்பதில் கனடியத் தமிழர்கள் உறுதியாக உள்ளனர்.

ஆதாரம் : Mediacorp Seithi

மேலும் செய்திகள் கட்டுரைகள்