ஆரம்ப ஆட்டங்களில் டோனி இல்லை!
REUTERS/Mihir Singh
This audio is generated by an AI tool.
இந்தியக் கிரிக்கெட் IPL போட்டியில் ஆரம்ப சோகம்.
மகேந்திர சிங் டோனி (Mahendra Singh Dhoni) இந்தியப் பிரிமியர் லீக்கின் (IPL) தொடக்கப் போட்டிகளில் பங்கேற்கமாட்டார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) தெரிவித்துள்ளது.
ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர்.
காலின் பின் பகுதியில் ஏற்பட்ட காயத்திற்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவர் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 முறை IPL போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.
2024ஆம் ஆண்டு அவர் அணித் தலைவர் பொறுப்பிலிருந்து விலகினார்.
டோனி 2020ஆம் ஆண்டு அனைத்துலகப் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றார்.
அப்போதிலிருந்து அவர் IPL போட்டியில் மட்டும் விளையாடி வருகிறார்.
டோனிக்கு வயது 44.
சென்ற IPL போட்டிகளில் சென்னையின் 14 ஆட்டங்களிலும் அவர் விளையாடினார்.