சிகாகோ துப்பாக்கிச் சூடு - சந்தேக நபர் கைது
அமெரிக்காவின் சிகாகோ நகரில் சுதந்திர தின அணிவகுப்பில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் நபரைக் காவல்துறை கைது செய்துள்ளது.
சம்பவத்தில் 6 பேர் மாண்டனர். 36க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
பெரிய ரகத் துப்பாக்கியைக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.
Highland Park எனும் புறநகர்ப் பகுதியில் அணிவகுப்பு நடந்துகொண்டிருந்தபோது, உயர் மாடிக் கட்டடத்தின் கூரையிலிருந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
சந்தேக நபர் 22 வயது ராபர்ட் இ கிரிமோ (Robert E Crimo) என்று கூறப்பட்டது.
அமெரிக்காவில் தொடரும் துப்பாக்கிச் சூடு குறித்து அதிபர் ஜோ பைடன் வருத்தம் தெரிவித்தார்.
ஆனால் இதைக் கட்டாயம் கடந்து வருவோம் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
துப்பாக்கிக் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கும் முக்கிய மசோதாவுக்கு, அமெரிக்க நாடாளுமன்றம் சென்ற மாதம் ஒப்புதல் அளித்தது.