பிலிப்பீன்ஸ் நிலநடுக்கம்: பள்ளி, கல்லூரி வகுப்புகள் ரத்து
படம்: Ernesto Torres Jr via AP
பிலிப்பீன்ஸில் ஏற்பட்ட வலுவான நிலநடுக்கத்தை அடுத்து மிண்டனாவ் (Mindanao) பகுதி பாதிக்கப்பட்டுள்ளது,
அங்குள்ள அனைத்து நிலைப் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அடுத்த அறிவிப்பு வரும் வரை வகுப்புகள் நடத்தப்பட மாட்டா என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் நேரப்படி காலை ஏழரை மணி வாக்கில் மிண்டனாவ் தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
நிலநடுக்கம் 7.8 ரிக்டர் அளவில் இருந்ததாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு நிலையம் கூறியது.
இந்தோனேசியாவிலும் வலுவான அதிர்வுகள் உணரப்பட்டன.
கணிசமான சேதமும் பின்னதிர்வுகளும் ஏற்படலாம் என்று அதிகாரிகள் எச்சரித்தனர்.