Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

துப்பாக்கியை மிதித்த நாய்... ஆடவர் மரணம்

வாசிப்புநேரம் -

அமெரிக்காவின் கான்சஸ் (Kansas) மாநிலத்தில் ஒரு நாய் துப்பாக்கியை மிதித்ததை அடுத்து ஆடவர் ஒருவர் மாண்டார். 

சம்பவம் சனிக்கிழமை (21 ஜனவரி) நடந்தது.

ஆடவர் நாயை அழைத்துக்கொண்டு வேட்டையாடப் புறப்பட்டார்.

அவர் லாரியின் இருக்கையில் துப்பாக்கியை வைத்திருந்தார்.

நாய் அதை மிதித்ததில் துப்பாக்கியிலிருந்து தோட்டா பாய்ந்தது.

ஓட்டுநர் இருக்கையில் இருந்த ஆடவரைத் தோட்டா தாக்கியதில் 
அவர் மாண்டார்.

2021ஆம் ஆண்டில் அமெரிக்காவில் துப்பாக்கி சம்பந்தப்பட்ட விபத்துகளில் 500க்கும் அதிகமானோர் மாண்டனர்.

-AFP

ஆதாரம் : AFP

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்