படிம எரிபொருள் - "பூமியால் தாங்க முடியாது"
This audio is generated by an AI tool.
பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா (Luiz Inacio Lula da Silva), கடுமையான படிம எரிபொருள் பயன்பாட்டைப் பூமியால் இன்னும் நீண்டகாலத்துக்குத் தாங்கிக்கொள்ள முடியாது என்று எச்சரித்துள்ளார்.
பிரேசில் இந்த ஆண்டின் COP30 பருவநிலை மாநாட்டை ஏற்றுநடத்துகிறது.
பசுமை எரிசக்திக்கு மாறும் நடைமுறைகளைத் துரிதப்படுத்த மாநாட்டில் வலியுறுத்தப்படுகிறது.
கடந்த 200 ஆண்டுகளாகப் படிம எரிபொருளைச் சார்ந்து நாடுகள் இருந்தன;
பருவநிலை மாற்றத்தைக் கையாளும் முயற்சியில் முன்னேற்றம் கிடைக்குமா என்பது எரிசக்தியைப் பொறுத்திருக்கிறது என்று பிரேசில் அதிபர் சொன்னார்.
படிம எரிபொருளை நம்பியிருப்பதை நிறுத்த நாடுகள் ஈராண்டுக்கு முன் இணக்கம் தெரிவித்தன.