Skip to main content
தாய்லந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் மீது குற்றச்சாட்டு
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

தாய்லந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் மீது குற்றச்சாட்டு

வாசிப்புநேரம் -
தாய்லந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் மீது குற்றச்சாட்டு

படம்: Reuters/Athit Perawongmetha

தாய்லந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவாட் (Thaksin Shinawatra) மன்னராட்சியை அவமதித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறது.

2015ஆம் ஆண்டில் செய்தித்தாளுக்கு வழங்கிய பேட்டியில் திரு. தக்சின், மன்னராட்சியை அவமரியாதையாய்ப் பேசியதாகக் கூறப்படுகிறது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 15 ஆண்டு வரை சிறைத்தண்டனை விதிக்கப்படக்கூடும்.

கோவிட்-19 கிருமித்தொற்றால் திரு. தக்சினால் நீதிமன்றத்திற்குச் செல்லமுடியவில்லை என்று அவரின் வழக்கறிஞர்கள் கூறினர்.

திரு. தக்சின், அவர் எதிர்நோக்கும் குற்றச்சாட்டுகளைக் கேட்பதற்காக, வரும் 18ஆம் தேதிக்குச் சந்திப்பு தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது.
ஆதாரம் : Reuters

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்