ஹாங்காங் தீ - ஒரே படத்தில் எத்தனை உணர்வுகள்...
வாசிப்புநேரம் -
அன்று வோங் தமது பேத்தியைப் பள்ளியிலிருந்து அழைக்கச் சென்றிருந்தார்.
71 வயது வோங்கும் அவரது மனைவியும் மாற்றி மாற்றி பேத்தியைப் பள்ளியிலிருந்து அழைப்பது வழக்கம்.
அன்று வோங்கின் முறை.
71 வயது வோங்கும் அவரது மனைவியும் மாற்றி மாற்றி பேத்தியைப் பள்ளியிலிருந்து அழைப்பது வழக்கம்.
அன்று வோங்கின் முறை.
வீட்டிலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே குடியிருப்புக் கட்டடம் ஒன்றில் தீ மூண்டதை அவர் உணர்ந்தார்.
வோங் திரும்பியபோது அவரும் அவரது மனைவியும் வசிக்கும் கட்டடத்திற்குத் தீ பரவிவிட்டது.
"எனது மனைவி உள்ளே இருக்கிறார்!" என்று வோங் கதறினார்.
சென்ற வாரப் புதன்கிழமை (26 நவம்பர்) அந்த அசம்பாவிதம் நடந்தது.
வோங் திரும்பியபோது அவரும் அவரது மனைவியும் வசிக்கும் கட்டடத்திற்குத் தீ பரவிவிட்டது.
"எனது மனைவி உள்ளே இருக்கிறார்!" என்று வோங் கதறினார்.
சென்ற வாரப் புதன்கிழமை (26 நவம்பர்) அந்த அசம்பாவிதம் நடந்தது.
வோங்கின் மனைவி உட்பட இன்னும் 30 பேரைக் காணவில்லை.
சுமார் 156 பேர் மாண்டனர்.
வோங் கைகளைத் தூக்கிக்கொண்டு கதறும் படம் இணையத்தில் பரவியது.
ஹாங்காங் தீ அசம்பாவிதத்தை எடுத்துக்காட்டும் படமாக அது கருதப்பட்டது.
சுமார் 156 பேர் மாண்டனர்.
வோங் கைகளைத் தூக்கிக்கொண்டு கதறும் படம் இணையத்தில் பரவியது.
ஹாங்காங் தீ அசம்பாவிதத்தை எடுத்துக்காட்டும் படமாக அது கருதப்பட்டது.
உலகில் எங்கு இருந்தாலும் அந்தப் படத்தின் மூலம் வோங்கின் வலியையும் உதவ முடியாமல் தவிப்பதையும் புரிந்துகொள்ள முடியும் என்று அந்தப் படத்தை எடுத்த ராய்ட்டர்ஸ் (Reuters) நிறுவனத்தின் நிழற்படக் கலைஞர் கூறினார்.
புதுப்பிப்புப் பணிகளுக்காகக் குடியிருப்புக் கட்டடங்களைச் சுற்றி விரிக்கப்பட்டிருந்த வலைகளால் தீ விரைவாகப் பரவியதாக அதிகாரிகள் கூறினர்.
புதுப்பிப்புப் பணிகளுக்காகக் குடியிருப்புக் கட்டடங்களைச் சுற்றி விரிக்கப்பட்டிருந்த வலைகளால் தீ விரைவாகப் பரவியதாக அதிகாரிகள் கூறினர்.
ஆதாரம் : Reuters