ஆப்கானிஸ்தானில் வலுவான நிலநடுக்கம் - 100க்கும் அதிகமானோர் மாண்டனர்
(படம்: Mohsen KARIMI / AFP)
ஆப்கானிஸ்தானின் மேற்குப் பகுதியை வலுவான நிலநடுக்கம் உலுக்கியுள்ளது. நூற்றுக்கணக்கானோர் மாண்டு போயிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. சுமார் 1,000 பேர் காயமடைந்தனர். ஈரான் எல்லையை ஒட்டிய ஹேராத் (Herat) நகரில் 6.3 ரிக்டர் அளவுள்ள நிலநடுக்கம் ஏற்பட்டது.
பல கட்டடங்கள் சேதமடைந்தன. இடிபாடுகளுக்கு இடையே பலர் சிக்கியுள்ளனர். நிலநடுக்கத்துக்குப் பிறகு 3 முறை வலுவான அதிர்வுகள் ஏற்பட்டன.
முன்னதாக, 15 பேர் மாண்டதாகத் தகவல் வெளியானது. பெருமளவு சேதம் ஏற்பட்டிருப்பதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அவசரச் சேவைப் பிரிவினர் கூறினர்.
300க்கும் அதிகமானோர் மாண்டதாக
அதிகாரபூர்வமற்ற தகவல்கள் கூறுகின்றன.