பாகிஸ்தான் தீவிரமான தாக்குதலுக்குத் தயாராகிறது - இந்தியா தகவல்

படம்: Instagram/kashmirtodaynews
பாகிஸ்தான் துருப்பினர் எல்லையருகே குவிக்கப்படுவது தாக்குதல் நடத்தும் அந்நாட்டின் எண்ணத்தைக் காட்டுவதாக இந்திய ராணுவப் பேச்சாளர் கர்னல் சோஃபியா குரேஷி (Sofiya Qureshi) கூறியிருக்கிறார்.
பாகிஸ்தான் தாக்கினால் பதிலடி கொடுக்க இந்திய வீரர்கள் தயாராக இருப்பதாக அவர் சொன்னார்.
பாகிஸ்தான் அமைதியை நாடினால், இந்தியாவும் அதையே நாடுவதாகவும் கர்னல் சோஃபியா குறிப்பிட்டார்.
இதற்கிடையே பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் இந்தியாவின் ராணுவ உள்கட்டமைப்புக்கு எந்தச் சேதமும் ஏற்படவில்லை என்று ஆகாயப்படை தெரிவித்திருக்கிறது.
பாகிஸ்தான் தொடர்ந்து பொய்யான தகவல்களைப் பரப்பி வருவதாக இந்திய ஆகாயப்படைத் தளபதி வியோமிகா சிங் (Vyomika Singh) கூறியதாக BBC செய்தி தகவல் வெளியிட்டது.