Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

"ஒழுங்காக எழுதுங்கள்" மருத்துவர்களுக்கு உத்தரவிட்ட இந்திய நீதிமன்றம்

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

மருத்துவர்களின் கையெழுத்து தெளிவாக இருக்கவேண்டும் என்று இந்தியாவின் மாநில உயர்நீதிமன்றம் ஒன்று உத்தரவிட்டிருக்கிறது.

பாலியல் வன்முறை குறித்த வழக்கில் தீர்ப்பு வழங்கியபோது நீதிபதி அதைக் கூறினார்.

செய்தியை BBC ஊடகம் தெரிவித்தது.

அந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர் மருத்துவச் சோதனைக்கு உட்படுத்தப்பட்டார். அந்தச் சோதனை பற்றிய அறிக்கை வழக்கின்போது ஆதாரமாக முன்வைக்கப்பட்டது.

அறிக்கையை அறவே படிக்கமுடியவில்லை என்று நீதிபதி குறைகூறினார்.

தொழில்நுட்பம் பலமடங்கு வளர்ந்திருக்கும்போது மருத்துவர்கள் இன்னும் கையால் மருத்துவ அறிக்கைகளை மோசமான கையெழுத்தில் எழுதுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார் அவர்.

மருத்துவப் பள்ளியில் கையெழுத்துப் பாடங்களும் கட்டாயம் நடத்தப்படவேண்டும் என்று நீதிபதி குறிபிட்டார்.
ஆதாரம் : Others/BBC

மேலும் செய்திகள் கட்டுரைகள்