Skip to main content
இந்தோனேசிய எரிமலை வெடிப்பு
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

இந்தோனேசிய எரிமலை வெடிப்பு - 2 சிங்கப்பூரர்கள் பலி

வாசிப்புநேரம் -
இந்தோனேசிய எரிமலை வெடிப்பு - 2 சிங்கப்பூரர்கள் பலி

படம்: MAGMA Indonesia இணையத்தளம்

இந்தோனேசியாவின் எரிமலை வெடிப்பில் மூவர் மாண்டதாகக் காவல்துறைத் தலைவர் உறுதிப்படுத்தியிருக்கிறார்.

இருவர் சிங்கப்பூரர்கள். ஒருவர் கிழக்கு இந்தோனேசியாவிலுள்ள டெர்நாட்டே (Ternate) தீவு வாசி.

7 சிங்கப்பூரர்கள் பத்திரமாகக் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

10 இந்தோனேசியர்களை இன்னமும் காணவில்லை.

மலையேறச் சென்ற 20 பேரைக் காணவில்லை என்று மீட்புப்பணியாளர் ஒருவர் முன்னர் AFP ஊடகத்திடம் கூறினார்.

சென்ற மாதமே எரிமலையின் அதிர்வுகள் உணரப்பட்டன. ஏப்ரல் 17ஆம் தேதி மலைப்பகுதி மூடப்பட்டது.

எப்படி அந்த 20 பேர் மலையேறச் சென்றார்கள் என்பது தெரியவில்லை.

ஆதாரம் : Others

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்