அமெரிக்காவுடன் பேச்சு நடத்த ஈரான் முடிவு?
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் குறைகிறது.
ராணுவ மிரட்டலைவிட்டு இருநாடுகளும் பின்வாங்கத் தொடங்கியிருக்கின்றன.
அமெரிக்காவுடன் அணுச்சக்திப் பேச்சைத் தொடங்க ஈரானிய அதிபர் உத்தரவிட்டிருப்பதாக ஈரானியச் செய்தி நிறுவனங்கள் கூறுகின்றன.
பேச்சு உடனே தொடங்கவிருப்பதாக ஈரானிய வெளியுறவு அமைச்சர் சொன்னார்.
துருக்கியேவின் இஸ்தான்புல் நகரில் அமெரிக்க-ஈரானிய அதிகாரிகள் சந்திக்கவிருப்பதாக அமெரிக்காவின் Axios செய்தித்தளம் சொல்கிறது.
வெள்ளிக்கிழமை (6 பிப்ரவரி) நடைபெறும் அந்தச் சந்திப்பில் பல அரபு நாடுகளும் பங்கேற்கும்.
ஈரானுடன் ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ளமுடியும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
எனினும் இணக்கம் எட்டப்படவில்லை என்றால் அசம்பாவிதம் ஏற்படும் என்று அவர் மிரட்டியுள்ளார்.