உணவுக்காகக் காத்திருக்கும் மக்களைக் கொல்லவில்லை: இஸ்ரேலியப் பிரதமர்
படம்: Reuters
This audio is generated by an AI tool.
காஸாவில் உணவுக்காகக் காத்திருந்தவர்களைச் சுடுவதற்கு இஸ்ரேல் ராணுவத்திற்கு உத்தரவிடப்பட்டதாய் வெளியான தகவலை இஸ்ரேலியப் பிரதமர் மறுத்துள்ளார்.
ஆயுதம் இல்லாத பொதுமக்களைத் தாக்கச் சொன்னதாக இஸ்ரேலின் ஹாரெட்ஸ் (Haaretz) செய்தித்தாளில் வந்த தகவலைப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹு (Benjamin Netanyahu) மறுத்தார்.
உலகின் ஆக ஒழுக்கமான ராணுவத்துக்கு எதிராக அவதூறு கூறியதாய் அவர் செய்தித்தாளைச் சாடினார்.
கடந்த மாதம் 27ஆம் தேதியிலிருந்து காஸாவில் உணவு விநியோகித்துவரும் பகுதிகளில் ஐந்நூறுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாகப் பாலஸ்தீனச் சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர்