ஜொகூர் கார் விபத்து - 19 வயது ஓட்டுநர் 2 நாளுக்குத் தடுத்துவைப்பு
வாசிப்புநேரம் -
(கோப்புப் படம்: CNA/Jeremy Long)
ஜொகூரில் நடந்த கார் விபத்தில் சம்பந்தப்பட்ட 19 வயது ஓட்டுநர் 2 நாளுக்குத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
அவர் சிங்கப்பூரில் பல்கலைக்கழகத்தில் படிப்பதாக NST செய்தி நிறுவனம் தெரிவித்தது.
அவரும் அவரது 22 வயதுச் சகோதரரும் கார்களை அதிவேகமாக ஓட்டிச் சென்றபோது விபத்து நேர்ந்ததாக நம்பப்படுகிறது.
BMW கார் கட்டுப்பாட்டை இழந்து 4 கார்கள் மீது மோதியதாக மலேசிய ஊடகங்கள் தெரிவித்தன.
திங்கட்கிழமை (1 ஜூன்) நடந்த அந்த விபத்தில் 10 வயதுச் சிறுமி உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மாண்டனர்.
காரை ஓட்டிய 22 வயது ஆடவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படும் வழியில் உயிரிழந்தார்.
19 வயது ஆடவர் Mercedes-Benz A250 காரை ஓட்டினார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 5 ஆண்டுவரை சிறைத்தண்டனையும் 15,000 ரிங்கிட் வரை (4,800 வெள்ளி) அபராதமும் விதிக்கப்படலாம்.
அவர் சிங்கப்பூரில் பல்கலைக்கழகத்தில் படிப்பதாக NST செய்தி நிறுவனம் தெரிவித்தது.
அவரும் அவரது 22 வயதுச் சகோதரரும் கார்களை அதிவேகமாக ஓட்டிச் சென்றபோது விபத்து நேர்ந்ததாக நம்பப்படுகிறது.
BMW கார் கட்டுப்பாட்டை இழந்து 4 கார்கள் மீது மோதியதாக மலேசிய ஊடகங்கள் தெரிவித்தன.
திங்கட்கிழமை (1 ஜூன்) நடந்த அந்த விபத்தில் 10 வயதுச் சிறுமி உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மாண்டனர்.
காரை ஓட்டிய 22 வயது ஆடவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படும் வழியில் உயிரிழந்தார்.
19 வயது ஆடவர் Mercedes-Benz A250 காரை ஓட்டினார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 5 ஆண்டுவரை சிறைத்தண்டனையும் 15,000 ரிங்கிட் வரை (4,800 வெள்ளி) அபராதமும் விதிக்கப்படலாம்.
ஆதாரம் : Others