ஆப்கானிஸ்தான் தாக்குதல் - விசாரிக்க வேண்டும்: ஐக்கிய நாட்டு நிறுவனம்
(படம்: Wakil KOHSAR / AFP)
This audio is generated by an AI tool.
ஐக்கிய நாட்டு நிறுவனம், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நடத்தப்பட்ட ஆகாயத் தாக்குதலை ஒரு சுயேச்சைக் குழு விசாரிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறது.
அது துரிதமாக நடத்தப்படவேண்டும் என்றும் நிறுவனம் சொன்னது.
போதைப்பொருள் மறுவாழ்வு நிலையத்தின்மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பாகிஸ்தான் காரணம் என்று ஆப்கானிஸ்தான் குற்றஞ்சாட்டியது.
சம்பவத்தில் நூற்றுக்கணக்கானோர் மாண்டனர்.
குற்றச்சாட்டுகளைப் பாகிஸ்தான் மறுத்தது.
அவை பொய் என்றும் வேண்டுமென்றே தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்தும் முயற்சி என்றும் பாகிஸ்தான் சொன்னது.
ராணுவ அம்சங்களையும் பயங்கரவாதத்திற்கு ஆதரவான கட்டமைப்புகளையும் துல்லியமாய்க் குறிவைத்ததாகப் பாகிஸ்தான் கூறியது.