Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

உக்ரேனில் சில நகரங்கள் மீது ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது

வாசிப்புநேரம் -
உக்ரேனிய நகரங்கள் சிலவற்றின் மீது ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது.

கார்கிவ், ஒடேசா (Kharkiv, Odesa) நகரங்களில் குடியிருப்புக் கட்டடங்களும் உள்கட்டமைப்பு வசதிகளும் தாக்கப்பட்டுள்ளதாக உக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

தாக்குதல்களால் சில பகுதிகளில் மின்தடை ஏற்பட்டுள்ளது என்று வட்டாரத் தலைவர்கள் கூறினர்.

துறைமுக நகரான ஒடேசாவில் மின் கட்டமைப்பு குறிவைத்துத் தாக்கப்பட்டுள்ளதாக அதன் ஆளுநர் கூறினார்.

குடியிருப்புப் பகுதிகள் தாக்குதலுக்கு இலக்கான போதும் உயிருடற்சேதம் ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை.

கிழக்குப்புற டினிப்ரோ (Dnipro) நகரிலும் ஏனைய வட்டாரங்களிலும்கூட ஏவுகணைத் தாக்குதல்கள் நேர்ந்துள்ளன.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்