போர்ச்சுகலில் மின்சார ரயில் விபத்து - 15 பேர் மரணம்
AP
This audio is generated by an AI tool.
போர்ச்சுகலின் லிஸ்பனில் Gloria funicular மின்சார ரயில் விபத்துக்குள்ளானதில் குறைந்தது 15 பேர் மாண்டனர்.
அவர்கள் எந்த நாட்டினர் என்ற விவரம் எதுவும் அதிகாரிகள் வெளியிடவில்லை.
ஆனால் உயிரிழந்தவர்களில் சிலர் வெளிநாட்டினர் என்று கூறியிருக்கின்றனர்.
விபத்தில் 18 பேர் காயமுற்றனர்.
ஐவருக்குக் கடுமையான காயங்கள் ஏற்பட்டிருந்தன.
விபத்துக்காக லிஸ்பனில் இன்று ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படும்.
அதிகாரிகள் விரைவில் விபத்துக்கான காரணத்தைக் கண்டறிவர் என்று நம்புவதாக போர்ச்சுகல் அதிபர் மார்செலோ ரிபெலோ டிசோஸா (Marcelo Rebelo de Sousa) தெரிவித்திருக்கிறார்.
விபத்து நடந்த இடத்தில் காவல்துறை விசாரணை நடத்துகிறது.